தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/திருவள்ளுவர்/மறந்தும் தீங்கு நினைக்காதீர்கள்

மறந்தும் தீங்கு நினைக்காதீர்கள்

மறந்தும் தீங்கு நினைக்காதீர்கள்


ADDED : மார் 19, 2010 02:10 PM

Google News

ADDED : மார் 19, 2010 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சரியான நேரத்தில் காலம் கருதிச் செய்யும் உதவி அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் மதிப்பு இந்த பரந்த உலகத்தைக் காட்டிலும் பெரியதாகும்.

* பகைவரால் உண்டாகும் தீங்கினைவிட, ஒருவன் கொண்ட பொறாமை குணமே அவனுக்கு தீங்கு தரப் போதுமானது. பொறாமை குணம் கொண்டவனை அழிக்க வெளியில் வேறு பகை தேவையில்லை.

* மனம் வருந்தக்கூடிய கொடுஞ்சொற்களைக் கூறுவதைக் காட்டிலும் பயனற்ற சொற்களைப் பேசுதல் குற்றமாகும்.

* மறந்தும்கூட பிறருக்கு தீங்கு எண்ணாதீர்கள். திட்டமிட்டு பிறருக்குத் தீங்கு செய்பவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும்.

* தனக்கு உண்டாகும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவத்தின் இலக்கணமாகும்.

* மனதில் வஞ்சக எண்ணங்களை எண்ணிக் கொண்டு, ஒழுக்கம் கொண்டவன் போல் நடிப்பவனைக் கண்டு அவன் உள்ளத்தில் இருக்கும் இறைவன் சிரிப்பான்.

* குற்றமற்ற நன்மை பிறருக்கு கிடைக்கும் என்றால், அதற்காகப் பொய்யைக் கூட சொல்லலாம். அப்பொய்யும் உண்மையைப் போலவே ஆகும்.

-திருவள்ளுவர்



Trending





      Dinamalar
      Follow us